பல்லவி
ஸ்ரீ-பதி முக2 விரசித பூஜ்யே
ஸ்ரீ பார்வதி மாம் பாஹி தே3வி
அனுபல்லவி
1நீப வன நிலயே நிராமயே
நிடில நயன ஜாயே மம ஹ்ரு2த3ய
தாப ஹாரிணி 2நவ ரத்(னா)லயே
தாபஸ வர நாரத3 முதி3தே தே3வி (ஸ்ரீ-பதி)
சரணம்
சரணம் 1
தருணி லதா பல்லவ ம்ரு2து3 சரணே
தபன விது4 விலோசனே
அருண கோடி ஸம காந்தி யுத
ஸ1ரீரே கல த்4ரு2த கலாபே
ஸுருசிர 3மணி கண்ட2 லஸன்-மணி ஹாரே
ஸுகு3ண-ஸீ1லே ஸததம் ஸமுத3ம்
கருணயா அவ தீ3னம் பர தே3வதே
4காம கோடி பீட2 க3தே லலிதே (ஸ்ரீ-பதி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/-பதி/ முக2/ விரசித பூஜ்யே/
மா/ மணாளன்/ முதலானோரால்/ தொழப்பெற்றவளே/
ஸ்ரீ பார்வதி/ மாம்/ பாஹி/ தே3வி/
ஸ்ரீ பார்வதீ/ என்னை/ காப்பாய்/ தேவீ/
அனுபல்லவி
நீப/ வன/ நிலயே/ நிராமயே/
கதம்ப/ வனத்தில்/ நிலைபெற்றவளே/ குறைவற்றவளே/
நிடில/ நயன/ ஜாயே/ மம/ ஹ்ரு2த3ய/
நெற்றி/ கண்ணனின்/ இல்லாளே/ எனது/ இதய/
தாப/ ஹாரிணி/ நவ/ ரத்ன/-ஆலயே/
வெம்மையினை/ தணிப்பவளே/ நவ/ ரத்தின/ இல்லத்தில் உறைபவளே/
தாபஸ/ வர/ நாரத3/ முதி3தே/ தே3வி/ (ஸ்ரீ-பதி)
தவசி/ உயர்/ நாரதரால்/ அகமகிழ்பவளே/ தேவீ/
சரணம்
சரணம் 1
தருணி/ லதா/ பல்லவ/ ம்ரு2து3/ சரணே/
(என்றும்) இளமங்கையே/ கொடி/ குருத்து/ (நிகர்) மிருதுவான/ திருவடியினளே/
தபன/ விது4/ விலோசனே/
பரிதி/ மதி/ கண்களினளே/
அருண/ கோடி/ ஸம/ காந்தி/ யுத/
அருணன்/ கோடி/ நிகர்/ (சிவந்த) காந்தி/ யுடைய/
ஸ1ரீரே/ கல/ த்4ரு2த/ கலாபே/
மேனியளே/ பிறை/ யணியும்/ மதியே (மதி நிகர் அழகியே)/
ஸுருசிர/ மணி கண்ட2/ லஸத்/-மணி/ ஹாரே/
அழகிய/ மிடற்றினளே/ மிளிரும்/ மணி/ மாலை/
ஸுகு3ண-ஸீ1லே/ ஸததம்/ ஸமுத3ம்/
நற்பண்பினளே/ எவ்வமயமும்/ மகிழ்வுடனும்/
கருணயா/ அவ/ தீ3னம்/ பர/ தே3வதே/
கருணையுடனும்/ காப்பாய்/ (இந்த) எளியோனை/ பர/ தேவதையே/
காம/ கோடி/ பீட2/ க3தே/ லலிதே/ (ஸ்ரீ-பதி)
காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ லலிதையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மணி கண்ட2 - மணி க2ண்ட2 : இவ்விடத்தில், 'மணி க2ண்ட2' என்பது பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
1 - நீப வன நிலயே - கதம்ப வனத்தில் நிலைபெற்றவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (60) - 'கத3ம்ப3 வன வாஸினி' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'நீப-உபவனவதி' நோக்கவும்.
2 - நவ ரத்னாலயே - நவரத்தின இல்லத்தினில் உறைபவள் : அம்மை, சிந்தாமணி இல்லத்தில் வசிப்பதாகக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (57) - 'சிந்தாமணி க்3ரு2ஹாந்தஸ்தா2' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'சிந்தாமணி க்3ரு2ஹே' நோக்கவும்.
3 - மணி கண்ட2 லஸன்-மணி ஹாரே - மணிமாலை மிளிரும், அழகிய மிடற்றினள் - 'மணிமாலை' என்பது அட்டிகையைக் குறிக்கலாம்.
4 - காம கோடி பீட2 க3தே - காம கோடி பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (589) 'காம கோடிகா' நோக்கவும் - காம கோடி பீடம்.
Top
5 - ஸதா3 பூர்ணே - என்றும் பூரணி - இதுகுறித்து 'ஈஸா1வஸ்ய உபநிடத'ச் செய்யுள் கூறுவது -
"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;
(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."
இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.
6 - பரமேஸ1 வினுதே - பரமேசனால் போற்றப்பெற்றவள் - 'காமேசுவரன்-காமேசுவரி' அமர்ந்திருக்கும் கட்டிலின், நான்கு கால்களில், 'பரமேசனும்' ஒரு கால் எனக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (947) 'பஞ்ச ப்ரேத மஞ்சாதி4-ஸாயினி' நோக்கவும்.
7 - காமேஸ்1வரி - காமேசுவரி - ஸ்ரீ சக்கிரத்தின், 9-வது ஆவரணமாகிய, 'ஸர்வானந்த-மய சக்கிரம்' பற்றிய விவரங்கள் நோக்கவும். 'காமேசுவரி - காமேசுவரன்' பற்றிய காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நோக்கவும்.
Top
விளக்கம்
நெற்றிக் கண்ணன் - சிவன்
மணிமாலை - அட்டிகை
ஆனைமுகத்தோன் - கணபதி
கார்த்திகேயன் - முருகன்
பூரணி - பரம்பொருளின் இலக்கணம்
பரமேசன் - சிவன்
புரமெரித்தோன் - சிவன்
சியாம கிருஷ்ணன் - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை
கவிக் குலம் - கவிஞர்கள்
Top